முகப்பு
செய்திகள்

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா’

காந்தாரா திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட படக்குழு முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2023 at 12:06 PM
பகிர்:

காந்தாரா திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட படக்குழு முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

இதையும் படிக்க: ’துணிவு’ உலகளவில் புதிய சாதனை

Advertisement

ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் காந்தாரா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து காந்தாரா 2ஆம் பாகம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே ப்லிம்ஸ் சமீபத்தில் தெரிவித்த நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தைப் போல் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்காக காந்தாரா திரைப்படத்தை ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் திரையிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.