முகப்பு
செய்திகள்

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2022: தேர்வான சீரியல்கள் எவை?

ஜீ  தமிழ் குடும்பம் விருதுகள் கட்நத 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

Updated On : 4 ஜனவரி 2023, 3:48 pm IST
ஜீ தமிழ் தொடர் கதாபாத்திரங்கள்
பகிர்:

ஜீ  தமிழ் குடும்பம் விருதுகள் கட்நத 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

வெள்ளித் திரையில் நடிப்பவர்களுக்கு விருதுகள் வழங்கி பார்த்திருப்போம். அதற்கு சற்றும் சளைக்காத வகையில், அதே அளவு பிரமாண்டமாக சின்னத் திரை நடிகர்களுக்கும் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ஜீ நிறுவனம் ஜீ ''தமிழ் குடும்பம் விருதுகள்'' என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது. 

Advertisement

Advertisement

கரோனா காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மிகப்பெரிய வீட்டில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த ஆண்டை தவிர்த்து மற்ற ஆண்டுக்கான விருதுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வழங்கப்படும்.

அந்தவகையில் இந்த ஆண்டு (2022) தமிழ் குடும்பம் விருதுகள் 2022 விருதுகளுக்கு தேர்வான சீரியல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிடித்த தொடருக்கு பார்வையாளர்கள் வாக்களிக்கலாம். மக்களிடம் பெறும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த தொடர் தேர்வு செய்யப்படும். அந்தவகையில் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள தொடர்களின் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாரி, ரஜினி, பேரன்பு, தவமாய் தவமிருந்து, நினைத்தாலே இனிக்கும், வித்யா நம்பர் 1 ஆகிய தொடர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  இதில் பிடித்த தொடருக்கு மக்கள் வாக்களிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments