செய்திகள்

எதிர் நீச்சல் தொடரில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை!

எதிர் நீச்சல் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

எதிர் நீச்சல் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகளிடையேயும், பார்வையாளர்கள் இடையேயும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த தொடர் இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாள்களுக்கு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது.

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாந்தி வில்லியம்ஸ், எதிர் நீச்சல் தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாந்தி வில்லியம்ஸ் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர். இவர் சந்திரலேகா, மகராசி, செந்தூரப்பூவே, அழகு உள்ளிட்ட தொடர்களில்  நடித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT