செய்திகள்

கஜோலுக்கு நன்றி கூறிய ரன்வீர் சிங்! காரணம் என்ன?

DIN

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர் கரண் ஜோஹர். ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் எடுத்த கே2ஹெச்2 எனும் குச் குச் ஹோடா ஹேய் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் பல படங்களை தயாரித்துள்ளார். 9 படங்களையும் இயக்கியுள்ளார். 

தற்போது பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் வைத்து ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தினை இயக்கியுள்ளார். வியாகோம் 18, தர்மா புரடக்‌ஷன் இணைந்து வழங்கும் இந்தப் படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

தமிழில் சூர்யா ஜோதிக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையை போலவே பெண் வீட்டிற்கு செல்லும் ரன்வீர் சிங்கின் செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

3 நாளில் ரூ.45.90 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவிட்துள்ளது. பல பிரபலங்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை கஜோல், “கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கரண் ஜோஹர் நீங்கள் மீண்டும் வந்து விட்டீர்கள்” எனப் பதிவிட்டு இருந்தார். அதற்கு ரன்வீர் சிங், “நன்றி மேடம். கரண் ஜோஹரின் வரலாற்று சிரப்புமிக்க ரொமான்ஸில் நானும் பங்கு கொண்டதற்கு பெருமையாக உள்ளதென” தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியுள்ளார். 

மேலும், பிரபல திரைக்ககதை ஆசிரியரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், “சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த கமர்சியல் ஹிந்திப்படம் இதுதான். உங்களுக்கு நகைச்சுவையும் அழுத்தமான எமோசன் காட்சிகளும் பிடிக்குமென்றால் இது முக்கியமாக பார்க்க வேண்டிய படமாகும்” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT