விரைவில் நிறைவடையவுள்ள பிரபல சீரியல்!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அன்பே பே சீரியல் நவம்பர் 2020 முதல், 783 எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை பிரின்ஸ் இம்மானுவேல் மற்றும் பி.செல்வம் எழுதி இயக்கியுள்ளனர். இத்தொடருக்கு கிரண் இசையமைத்துள்ளார்.
அன்பே வா தொடரில் டெல்னா டேவிஸ் மற்றும் விராத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் அருண் குமார் ராஜன், ரோவன், சுவாதி தாரா, பூஜா ஃபியா, ஜே.துரை ராஜ், பாண்டி கமல், கன்யா பாரதி, சுஜாதா செல்வராஜ், ஆனந்த், வி.ஜே.தனுசேக், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இத்தொடரில் வில்லியாக நடித்துவரும் மகாலட்சுமிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பூமிகா கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பே வா தொடரின் சிறப்பு கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.