செய்திகள்

ஆதிபுருஷ்: 3வது நாளில் ரூ.340 கோடி வசூல்- நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி! 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 3 நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். சீதாவாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். 

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் 3வது நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

நடிகர் பிரபாஸ் இதனை பகிர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் மீண்டும் உச்சத்தை நிலைநிறுத்தியுள்ளது என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 

பிரபாஸ் ரசிகர்கள் பாக்ஸாபிஸ் கிங் என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் காலி தியேட்டரில் எப்படி இவ்வளவு வசூல் என கிண்டல் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகாலய சுரங்க விபத்தில் பலியானதாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 175 ரன்கள் குவிப்பு; வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா - சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி..?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவிப்பு!

#IndvPak | இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தில் மழை?: ஓர் அலசல்! | India vs Pakistan |

SCROLL FOR NEXT