'நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ஃபர்ஹானா ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.