செய்திகள்

விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து

‘மார்க் ஆண்டனி’  படப்பிடிப்பில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

‘மார்க் ஆண்டனி’  படப்பிடிப்பில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. 

அதனையடுத்து,  தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.

'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார்  இசையமைக்கிறார். 

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல்  செட்டில் வேகமாக மோதும் விடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, விஷாலின் அருகிலேயே லாரி சென்றது. 

இதுகுறித்து நடிகர் விஷால் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ சில நொடிகளில் சில அங்குலங்களில் நான் உயிர் பிழைத்தேன்.  கடவுளுக்கு நன்றி. இந்தச் சம்பவத்தால் என் கால் மறத்துப்போனது.’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று படப்பிடிப்பின்போது கயிறு அறுந்து விழுந்ததில் லைட்மேன் ஒருவர் காயமடைந்துள்ளார். விஷால் படப்பிடிப்பில் தொடர்ந்து விபத்து நடப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT