செய்திகள்

பொன்னியின் செல்வனை மாட்டிவிட்ட வானதி: வைரலாகும் புகைப்படம்! 

பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி தூங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’.

முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது. 

பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக நடித்த ஷோபிதா இணைந்து படப்பிடிப்பில் நடனமாடிய விடியோ இணையத்தில் 2 நாள்கள் முன்பு வைரலானது. இந்நிலையில் நடிகை ஷோபிதா பகிர்ந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 

படப்பிடிப்பில் ஜெயம் ரவி உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவிற்கு நடிகை த்ரிஷா கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT