செய்திகள்

ஜீ-5 ஓடிடியில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ஒரே படம்! 

டிடி ரிட்டர்ன்ஸ்  வெளியீட்டைக் கொண்டாடும் விதமாக மெரினா மாலில் பிரத்தியேக ஸ்கேரி ரூம் அமைத்துள்ளது   ZEE5 நிறுவனம். 

DIN

ஜீ 5 ஓடிடி தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, டிடி ரிட்டர்ன்ஸ்  படம் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தில் சமீபத்தில் வெளியான  டிடி ரிட்டர்ன்ஸ்  படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. 

ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர்  எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் காமெடிப்படமாக வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ்.

திரையரங்குகளில் மக்கள் வரவேற்பைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ஜீ 5 தளத்தில் வெளியானது.

நடிகர் சந்தானம், சுரபி, முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்ஸி விஜயன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  

நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு தீபக் குமார் மற்றும் படத்தொகுப்பு என் பி ஶ்ரீகாந்த் கையாண்டுள்ளனர். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம் தற்போது ஜீ 5 தளத்திலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதுவரை ஜீ 5 தளத்தில் வெளியான படங்களில் அதி வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது.  

குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம்  மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

டிடி ரிட்டர்ன்ஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ஜீ5  நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்குபெறும் பொதுமக்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் பிப்ரவரி 5-இல் மின்தடை

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்; அமைச்சா் ஆறுதல்

மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை

வவுச்சா் ஊழியா்கள் தா்னா; போலீஸாருடன் வாக்குவாதம்

துணைவேந்தா்கள் நியமனம்: தேடல் குழு பதவிக் காலம் நீட்டிப்பு நடவடிக்கையை கைவிட ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT