முகப்பு
செய்திகள்

மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் பேசிய எஸ்.ஜே. சூர்யா!

நடிகர் எஸ்.ஜே. சூர்யா மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் செய்துள்ளதாக கூறியுள்ளார். 

Updated On : 17 செப்டம்பர், 2023 at 11:58 AM
பகிர்:

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisement

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் எஸ்.ஜே. சூர்யா 5 குரல் மாற்றங்களில் பேசியிருப்பார். அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டங்களில் வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார். 

நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தமிழில் 12 நாள்களும் தெலுங்கில் 13 நாள்களுமாக மொத்தம் மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் பேசியுள்ளேன். ஏனெனில் படத்துக்கு அவ்வளவு தேவைப்பட்டது. அதற்கான வரவேற்பும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.