முகப்பு
செய்திகள்

திரையுலகை மீண்டும் ஆளப்போகும் த்ரிஷா!

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வரும் த்ரிஷா மீண்டும் திரையுலகை ஆளத் தொடங்கிவிட்டார்.

Updated On : 5 ஜூன் 2023, 12:43 pm IST
பகிர்:

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வரும் த்ரிஷா மீண்டும் திரையுலகை ஆளத் தொடங்கிவிட்டார்.

கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

Advertisement

Advertisement

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.

விஜய்யின் லியோ படத்தில் ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் பிஷியாக இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கதாநாயகியை மையமாக கொண்ட ‘தி ரோடு’ திரைப்படம் மற்றும் ‘பிரிந்தா’ இணைய தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் படக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கமல்ஹாசனின் 234-வது படத்துக்கும், தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள அவரது 50-வது திரைப்படத்துக்கும் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

விஜய், அஜித், மோகன் லால், கமல்ஹாசன், தனுஷ் என அடுத்தடுத்து இந்திய சினிமாவின் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா, தமிழ் சினிமாவில் மீண்டும் தவிர்க்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments