செய்திகள்

உடன்பிறப்பே - 2?

நடிகர் சசிகுமார், நடிகை ஜோதிகா நடித்த உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல்.

DIN

சூர்யா - ஜோதிகா இணை தயாரிப்பில் உருவான திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்த இப்படம், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது.

நேரடியாக, அமேசான் பிரைம் ஓடிடியில் தளத்தில் வெளியான உடன்பிறப்பே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சசிகுமாரின் நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இரா.சரவணன் உடன்பிறப்பேவின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக, ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான காதல் தி கோர், சைத்தான் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT