பிரேமலு - 2 வாய்ப்பு இல்லை: திலீஷ் போத்தன்
பிரேமலு - 2 திரைப்படம் கைவிடப்படுவதாக திலீஷ் போத்தன் அறிவிப்பு...
பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக இயக்குநர் திலீஷ் போத்தன் கூறியுள்ளார்.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.
இயக்குநர் கிரிஷ் ஏடி உள்பட அதே படக்குழுவினர் இணைவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் துவங்காமல் இருந்தன.
Advertisement
Advertisement
பிரேமலு படத்தைத் தொடர்ந்து நஸ்லன் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்தார். அப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது. மமிதா பைஜூவும் தமிழில் முக்கியமான நாயகியாக வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர், நடிகர் திலீஷ் போத்தன், ”பிரேமலு - 2 திரைப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. அதற்கு பதில், பத்தேலம் குடும்ப யூனிட் வெளியாகும்” எனக் கூறியுள்ளார். இதனால், பிரேமலு - 2 கைவிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.