செய்திகள்

குறுகிய காலத்தில் நிறைவடையவுள்ள பிரபல தொடர்!

DIN

விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்து வரும் கிழக்கு வாசல் தொடரில் நடிகர் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பிரதான வேடத்தில் நடிக்கிறார்கள். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார்.

கிழக்கு வாசல் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்த போதும், டிஆர்பி குறைந்தே காணப்படுகிறது. மேலும், நாயகி ரேஷ்மா முரளிதரன் இத்தொடரிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிழக்கு வாசல் தொடரை விரைவில் முடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதல் தொடங்கப்பட்ட இத்தொடர் விரைவில் நிறைவடைய உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரும் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT