FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஏப்ரல் 2024, 7:46 pm IST
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், திறமையாலும் சின்னத்திரையில் புகழ்பெற்று 2013ல் மெரினா திரைப்படம் மூலம் பெரிய திரையில் நாயகனாக அறிமுகம் ஆனார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் அபாரமான வெற்றியின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

பின், ஒரு சில திரைப்படங்கள் சறுக்கினாலும் வணிக ரீதியாக தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர் எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமொ, ரஜினிமுருகன், வேலைக்காரன், டாக்டர் என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததுடன், தன்னுடைய சம்பளத்தையும் பல மடங்கு ஏற்றி தற்போது ஒரு திரைப்படத்திற்க்கு ரூ.30 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

இன்றைய தமிழ் கதாநாயகர்களில் குடும்பங்களைத் திரையரங்கிற்கு வரவைப்பதில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். நடிகர்கள் ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள் மற்றும் பெண்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

Advertisement

Advertisement

தன்னுடைய திறமையை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி தமிழின் முன்னணி கதாநாயகனாக மாறியதுடன், வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை ஊக்கப்படுத்த திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். தொடர்ச்சியாக, பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிகளைக் குவித்து வரும் சிவகார்த்திகேயனின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.120 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தகவல்.

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில், இப்படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக, தன்னுடைய 23வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கை கோர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments