தமிழில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள நடிகைகள்!
இந்தாண்டின் தமிழ் வெற்றி படங்களில் மலையாள நடிகைகளே நடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவுக்கு இந்தாண்டு துவக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வரை மிகப்பெரிய வெற்றிப்படங்களோ விமர்சன ரீதியான நல்ல படங்களோ அதிகமாக அமையவில்லை.
சுந்தர். சியின் அரண்மனை - 4, விஜய் சேதுபதியின் மகாராஜா, இந்தியன் - 2, தனுஷின் ராயன் திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன. சூரியின் கருடன் எதிர்பாராத விதமாக நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
Advertisement
Advertisement
ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜமா, மின்மினி, தங்கலான், வாழை, கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்கள் விமர்சகர்களிடம் நல்ல பாராட்டுகளைப் பெற்றன. இதில், தங்கலான் படத்தில் நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் நடித்திருந்தனர். வாழையில் நிகிலா விமலும், கொட்டுக்காளியில் அன்னா பென்னும், மின்மினி படத்தில் எஸ்தர் அனிலும் நடித்து படத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர்.
ராயன் திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளியும், கருடனில் சிவதாவும் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரும் மலையாள நடிகைகள். ஆச்சரியமாக, தமிழில் வெளியான இந்தாண்டின் வெற்றிப்படங்களின் நாயகிகளும்கூட.
சினிமாவில் அபூர்வமாக இப்படி நடப்பதுண்டு என்றாலும், திறமையான இயக்குநர்கள் தமிழ் நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிற குரல்களும் எழுந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.