பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.
பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலானும் கேப்டன் மில்லர் படமும் முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் அதன் வசூலில் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிஷன் படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
அயலான் திரைப்படம் கடந்த 25 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ’இதனால் நிறைய இழந்துவிட்டேன்..’: விக்ராந்த்
அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால், இப்படம் வசூல் ரீதியான வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் இந்த வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொனடர். மேலும், சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியும் இதில் கலந்துகொண்டுள்ளார்.