நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
காரணம், லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து சிபி இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கதை சரியாக இல்லாததால் ரஜினி விலகிக்கொண்டார்.
பின், சிபி சக்கரவர்த்தி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களில் கதை சொன்னதாகும் நானியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைகூடவில்லை.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.