விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் செம்பா பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த ஆல்யா, பின்னர் இத்தொடரில் இருந்து விலகினார்.
ராஜா ராணி தொடரில் முதல் பாகத்தில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா மானசா காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆல்யா மானசா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்துவருகிறார். நடிகர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இனியா தொடர் படப்பிடிப்பு தளத்தில் விஷப் பாம்பொன்று வந்துள்ளது. இதை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு புதிய நபர் ஒருவர் வந்துருக்கிறார்” என்று தெரிவித்து விடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.