செய்திகள்

வெற்றிமாறன் கதை, துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி!

DIN

எதிர் நீச்சல் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் துரை செந்தில் குமார். பின்னர் இவர் இயக்கிய காக்கிச் சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பினையே பெற்றது. 

தற்போது நடிகர் சூரியுடன் இணைந்து புதிய படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நடிகர் சூரி  நடிப்பில் 'விடுதலை - பாகம் 2', 'கொட்டுக்காளி', ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. சமீபத்தில் இந்தப் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நகைச்சுவை நாயகனாக இருந்த சூரியின் மறு அவதாரமாக தற்போது நாயகனாக கலக்கி வருகிறார். 

நடிகர் சமுத்திரக்கனி தனது எக்ஸ் பதிவில், “துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு. வெல்வோம்” எனக் கூறியுள்ளார். இதற்கு நடிகர் சூரி, “நீங்கள் எங்களுடன் இருந்தது எங்களுக்கு பெரும் பலம்... நன்றிங்க அண்ணே” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னறிவிப்பின்றி புதூா் தபால்நிலையம் மூடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் தா்னா

நாய் கடித்து 101 வயது மூதாட்டி காயம்

சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT