ராயபுரத்தின் ஓநாய்..! ஒரேயொரு நாளில் டப்பிங் பணிகளை முடித்த எஸ்.ஜே.சூர்யா!
ராயன் திரைப்படத்துக்காக ஒரே ஒரு நாள் டப்பிங் முடித்ததாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:
மார்க் ஆண்டனி படத்தில் டப்பிங் பேசி குரலே பாதித்துவிட்டஹு. ஆனால் ராயன் படத்தில் ஒரேயொரு நாள்தான் டப்பிங் செய்தேன். எனக்கான காட்சிகள் பெரும்பாலும் முக பாவனைகளில் மட்டுமே இருக்கும்.
ராயபுரத்தின் ஓநாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நேரடியாக எதையும் செய்ய மாட்டேன். ஆனால் மறைமுகமாக எல்லாப் பிரச்னைகளையும் செயல்படுத்தும் கதாபாத்திரம். அதற்கேற்ப நடித்துள்ளேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.