செய்திகள்

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: பின்னணி பாடகரிடம் விசாரணை

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Din

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் வடிவேல் (33). மெட்ரோ ரயில்வே ஊழியா். இவா் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த வளசரவாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பின்னணி பாடகரான வேல்முருகன், மது போதையில் வடிவேலுவுடன், மெட்ரோ பணிக்காக சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா், வேல்முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

“தவெக-வில் இணையத் திட்டமா?” கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்!

ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

"தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்!": மு.க.ஸ்டாலின் | செய்திகள்: சில வரிகளில் | 25.11.25

SCROLL FOR NEXT