முகப்பு
செய்திகள்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

நடிகர் கார்த்திக் குமார் தான் மோசமாக பேசியதாக வெளியான் ஆடியோ குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Updated On : 17 மே 2024, 4:10 pm IST
பகிர்:

பாடகி சுசித்ராவின் நேர்காணலொன்று திங்கள்கிழமை வெளியானது. அதில், தன் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து, இந்த நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவைக் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். முக்கியமாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

மே.15ஆம் தேதி அன்று ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது. அதில், கார்த்திக் குமார் தன் முன்னாள் மனைவி சுசித்ராவைக் கேள்விகேட்கும்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகக் கூறுகின்றனர். இதைப் பேசியது கார்த்திக்தான் என நேர்காணலில் பேசியவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இது குறித்து கார்திக் குமார் ஏற்கனவே, “இது என் குரலும் வார்த்தைகளும் அல்ல. நான் இப்படியெல்லாம் பேசமாட்டேன்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளதாகவும் விரைவில் விசாரணை நடத்தப்படுமெனவும் க் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments