காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை: சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கனா, வாழ், டாக்டர், கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வணிக ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், எஸ்கே புரடக்ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதில், “எங்கள் சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.