முகப்பு
செய்திகள்

கார்த்திக் நரேனின் நிறங்கள் மூன்று: வெளியானது முதல் பாடல்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இதில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். 

தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இவர் இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், 2024-ல் இப்படம் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தாமரை எழுதிய இந்தப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.