இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு குறித்து...
செய்திகள்இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு குறித்து...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்துக்கு அடுத்து இட்லி கடை எனப் பெயரிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் நாயகியாக நித்யா மெனன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ராஜ் கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இட்லி கடை முதலில் ஏப். 10ஆம் தேதி வெளியாக இருந்தது. பின்னர், படத்தின் வெளியீட்டை அக். 1ஆம் தேதிக்கு தனுஷ் மாற்றினார்.
சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர்கள் பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்டோர் பாங்காக் சென்றிருந்தனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.