புதிய படத்தில் நாக சைதன்யா. படங்கள்: எக்ஸ் / நாக சைதன்யா.
செய்திகள்

நாக சைதன்யாவின் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

DIN

நாக சைதன்யா நடிக்கும் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய விடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யாவின் புதிய படத்தை கார்த்திக் தண்டு இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா, சுகுமார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

கடைசியாக நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் நடித்த தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.

நாக சைதன்யாவின் முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக தண்டேல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புராணக்கதை தொடர்பான புதிய படத்தில் (என்சி24) நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புக்கு ஆயுத்தமாகும் படக்குழுவின் வேலைகளை விடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.

தெலுங்குப் படங்களில் தற்போது அதிகமாக வரலாற்றுப் புனைவு படங்களை எடுக்கிறார்கள்.

இது குறித்து நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில், “எரிக்கப்பட்ட ரகசியங்கள், காலத்தைக் கடந்த, புராணக் கதை த்ரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT