கூலி போஸ்டர், அனிருத்.  படங்கள்: எக்ஸ் / சன்பிக்சர்ஸ், அனிருத்.
செய்திகள்

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் பற்றி அனிருத் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் டிரைலர் நாளை (ஆக. 2) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

சண்டைக் காட்சிகள் இருப்பதால், இப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பில் கூலி

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அனிருத் பேசியதாவது:

இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

நான் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்க நினைக்கவில்லை. ஆனால், படம் லோகேஷின் பலத்தை நம்பி உருவாகியுள்ளது. அவரது உலகத்தில் தலைவர் ரஜினி சார் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் சுவாரசியமாக இருக்கிறது.

புத்திசாலித்தனமான படம்

நானும் லோகேஷ் கனகராஜ் சேர்ந்தாலே எதிர்பார்ப்பு அதிகமிருக்கும். தற்போது ரஜினி சாரும் இருப்பதால் அது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளார்கள்.

இதுவரை 3 பாடல்கள், 5 பேரின் பின்புற காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. டீசர், டிரைலர் இல்லாமலே இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் புத்திசாலித்தனமாக படமாக இருக்கும். இதன் திரைக்கதை மிகவும் அழகாக இருக்கிறது என்றார்.

Music composer Anirudh has said that he has high expectations for actor Rajinikanth's film Coolie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT