முகப்பு
செய்திகள்

ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைந்தது குறித்து....

Updated On : 10 ஆகஸ்ட், 2025 at 6:33 AM
பாக்கியலட்சுமி தொடரின் போஸ்டர்.
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டப் பெண், சுயமாக முன்னேறி, எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறாள் என்பதை கருவாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்த வெள்ளிக்கிழமை(ஆக. 8) நிறைவடைந்தது.

கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவர் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைகிறார், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை, பாக்கியலட்சுமி ஏற்றுக்கொண்டு குடும்பம் ஒன்றாக இணைகிறது. இத்துடன் இனியா - ஆகாஷ் திருமணம் நடக்கிறது.

இவ்வாறாக பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் ஆனது பல்வேறு திருப்புமுனைக் காட்சிகளுடன் நிறைவடைந்துள்ளது.

இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பலருக்கு சற்று சோகத்தையே ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வந்த இரவு 7 மணிக்கு, திங்கள்கிழமைமுதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The series Pakhyalakshmi, which was aired on Vijay TV, ended with 1469 episodes.

முழு கட்டுரையைப் படிக்க →