மிகக் குறுகிய காலத்தில் நிறைவடையும் மீனாட்சி சுந்தரம் தொடர்!
மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக....
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் நடிகர் எஸ்.வி. சேகர், ஷோபனா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மீனாட்சி சுந்தரம் தொடரில் நடிகை ஷோபனாவுக்கு ஜோடியாக எஸ்.வி. சேகர் நடிக்கிறார்.
Advertisement
Advertisement
தொடரின் கதையின்படி, 76 வயதான எஸ்.வி. சேகர், 26 வயது ஷோபனாவை திருமணம் செய்கிறார். கதைக்களம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தத் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், மீனாட்சி சுந்தரம் தொடர் இந்த வார இறுதியில் வரும் ஆக. 23 ஆம் தேதி பரபரப்புக் காட்சிகளுடன் நிறைவடைகிறது.
மீனாட்சி சுந்தரம் தொடர் கடந்த ஏப்ரம் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், 4 மாதங்கள்கூட ஆகாத நிலையில், நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?
The end of Meenakshi Sundaram, which was aired on Kalaignar TV, has come as a bit of a shock to fans who watch the series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.