FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை நடிகர்!

சீரியல் நடிகர் அக்னி - ராதிகா திருமணம் குறித்து...

Updated On : 2 டிசம்பர் 2025, 1:16 pm IST
சீரியல் நடிகர் அக்னி - ராதிகா திருமணம். - படம்: இன்ஸ்டஸ்டாகிராம்
பகிர்:

செம்பருத்தி, மலர் தொடரில் நாயகனாக நடித்து பிரபலமான நடிகர் அக்னி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அக்னி.

Advertisement

Advertisement

முன்னதாக, கார்த்திக் ராஜ் 'செம்பருத்தி' தொடரில் நடித்திருந்த நிலையில், அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அவருக்கு பதில் நடிகர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மலர் பாத்திரத்தில் நாயகனாக நடிகர் அக்னி நடித்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார்.

நடிகர் அக்னி தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சீரியல் நடிகர் அக்னி - ராதிகா திருமணம்.

இந்த நிலையில், நடிகர் அக்னி மற்றும் ராதிகாவுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இவர் தன்னுடைய திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

summary

Regarding the marriage of serial actor Agni and Radhiga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments