வா வாத்தியார் வெளியீட்டில் மீண்டும் சிக்கல்!
வா வாத்தியார் திரைப்படத்திற்கு வெளியீட்டு சிக்கல் எழுந்துள்ளது...
நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்து சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
பின், டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தை வெளியிடுவதற்கான தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காரணம், தொழில் நஷ்டத்திலிருக்கும் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடனாக பெற்ற ரூ.21.78 கோடியை செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நிதிச் சிக்கலால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் படத்திற்கு பிரச்னை எழுந்துள்ளது கார்த்தி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படிக்க: ரத்னகுமாரின் புதிய பட பெயர் டீசர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.