செய்திகள்

மறுவெளியீடாகும் ஆயிரத்தில் ஒருவன்!

ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு குறித்து...

DIN

நடிகர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். 2010-ல் இப்படம் வெளியானபோது கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

அதேநேரம், இப்படம் தெலுங்கில் ‘யுகனிக்கி ஒக்கடு’ என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இன்றும் ஆண்டிற்கு ஒருமுறை இப்படம் மறுவெளியீடு காண்கிறது.

இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மறுவெளியீடு காண்கிறது. ஆந்திரம், தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தை மறுவெளியீடு செய்ய முடிவு செய்துள்ளனராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT