பராசக்தி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
பராசக்தி படப்பிடிப்பு குறித்து....
சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.
தற்போது, முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நானியின் ஹிட் - 3 டீசர்!
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதில், “மீனாட்சி, மயில், மல்லி; முதல்கட்ட படப்பிடிப்பு இந்த பூமியில் என் விருப்ப இடமான மதுரையில் முடிவடைந்தது” எனத் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.