சத்யா / ஸ்ரீகுமார் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

எதிர்நீச்சல் சத்யா, ஸ்ரீகுமார் நடிக்கும் புதிய தொடர்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் தனம் தொடர்

DIN

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் தனம் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த முன்னோட்ட விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் ஆதி குணசேகரனுக்கு தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சத்யா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்தத் தொடரின் பெயர் மற்றும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சத்யா

விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால், ஒளிபரப்பு நேரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தனம் தொடரில் சத்யாவுக்கு ஜோடியாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவர் வானத்தைப்போல, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். இதுவரை 25க்கும் அதிகமான தொடர்களில் ஸ்ரீகுமார் நடித்துள்ளார்.

இதனிடையே சத்யா - ஸ்ரீகுமார் இணைந்து நடிக்கும் தனம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் சத்யா, ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இது தனது கணவர் ஸ்ரீகுமாரின் ஆட்டோ என்றும் அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை நடத்துவதைப் போன்றும் முன்னோட்ட விடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மாரி 2 தொடரில் இணையும் பிரபலங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT