முகப்பு
செய்திகள்

எதிர்நீச்சல் சத்யா, ஸ்ரீகுமார் நடிக்கும் புதிய தொடர்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் தனம் தொடர்

Updated On : 29 ஜனவரி 2025, 4:47 pm IST
சத்யா / ஸ்ரீகுமார் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் தனம் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த முன்னோட்ட விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் ஆதி குணசேகரனுக்கு தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சத்யா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்தத் தொடரின் பெயர் மற்றும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சத்யா

விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால், ஒளிபரப்பு நேரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தனம் தொடரில் சத்யாவுக்கு ஜோடியாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவர் வானத்தைப்போல, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். இதுவரை 25க்கும் அதிகமான தொடர்களில் ஸ்ரீகுமார் நடித்துள்ளார்.

- dinamani

இதனிடையே சத்யா - ஸ்ரீகுமார் இணைந்து நடிக்கும் தனம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் சத்யா, ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இது தனது கணவர் ஸ்ரீகுமாரின் ஆட்டோ என்றும் அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை நடத்துவதைப் போன்றும் முன்னோட்ட விடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மாரி 2 தொடரில் இணையும் பிரபலங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments