செய்திகள்

பான் இந்திய கதைகளில் கவனம் செலுத்தும் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜின் படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிருத்விராஜ் பான் இந்தியத் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமான நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிஃபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக நல்ல அங்கீகாரம் பெற்றார்.

குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

இதற்கிடையே, சலார் திரைப்படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியளவில் பிரபலமானார். எம்புரானுக்குப் பின் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர், தற்போது ஹிந்தியில் சர்சாமின் (sarzameen) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.

அதேநேரம், இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சலார் - 2 உள்பட இன்னும் சில பான் இந்திய கதைகளில் ஒப்பந்தமாகத் திட்டமிட்டுள்ளாராம்.

மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் எனத் தன் அடையாளங்களை வளர்த்ததுடன் தற்போது பான் இந்திய கதைகளில் கவனம் செலுத்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் பிருத்விராஜ்!

actor prithviraj choosing pan india stories for his upcoming films

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

SCROLL FOR NEXT