எனது சிறிய பெருங்குழப்பமே..! மகனுக்காக ஜெனிலியா உருக்கம்!
நடிகை ஜெனிலியா தனது மகன் பிறந்தநாளுக்காக நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜெனிலியா தனது மகன் பிறந்தநாளுக்காக ”நீதான் எனது பெருங்குழப்பம்” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஜெனிலியா (37) பாய்ஸ் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் பல தமிழ்ப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சமீபத்தில் சச்சின் மறுவெளியீட்டில் கிடைத்த வரவேற்புக்கு நெகிழ்ச்சியாக விடியோ வெளியிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2014, 2016ஆம் ஆண்டு ரியான், ரகாயல் எனும் ஆண் குழந்தைகள் பிறந்தன.
தற்போது, 2-ஆவது ஆண் குழந்தை ரகாயல் பிறந்தநாளுக்காக ஜெனிலியா கூறியதாவது:
என் அருமை மகனே, நீதான் என் சிறிய பெருங்குழப்பம் - அது என்னை மென்மையானவளாகவும் வலுவானவளாகவும் மாற்றியுள்ளது.
ஒரு கணத்தில் என்னுடைய பொறுமையைச் சோதித்து எல்லாவற்றையும் குழப்பி, என்னை எப்போதும் கவனமாக இருக்க வைப்பாய், மறுகணத்தில் உன்னுடைய சிறிய விரல்களால் என் கழுத்தை சுற்றிப் பிடிக்கும்போது நான்தான் உனது மொத்த உலகம் என நினைக்கிறேன்.
உன்னுடைய அன்பு பெரியது, உன் அணைப்பு இறுக்கமாகவும் உனது சிரிப்பு களைப்பான எல்லா கணங்களையும் மதிப்பு மிக்கதாக மாற்றும்.
பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே, நீ தொல்லை தரும் குழந்தையாக இருந்தாலும் சரி அனைவரையும் அன்பாக நேசிப்பவனாக இருந்தாலும் சரி நீதான் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவன். எப்போதும் மாறாமலே இரு எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.