வாடிவாசல் கைவிடப்படுகிறதா? தயாரிப்பாளர் பதில்!
வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்...
சூர்யா - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவியே இப்படம் உருவாகிறது.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமானதும் ஜூன் மாதம் படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனால், சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி படத்தில் இணைந்தார். மேலும், வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் தாணு, “வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆலப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.