மன உளைச்சலில் இருந்தால் என்ன செய்வது? த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்!
நடிகை த்ரிஷா பகிர்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் குறித்து...
நடிகை த்ரிஷா பகிர்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீல்ஸ் ஏற்கெனவே டிரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடற்கரையில் ஒரு பெண் சாமியார் தோற்றத்தில் இருப்பவரிடம், “உங்களுக்கு மன உளைச்சலாக இருக்கும்போது என்ன செய்வீர்கள்?” எனக் கேள்வி கேட்பார்.
அதற்கு அந்தச் சாமியார் தாத்தா, “நான் மற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவேன். ஏனெனில், சமநிலை முக்கியம்” எனக் கூறியிருப்பார்.
Advertisement
Advertisement
இந்த விடியோ உண்மையானதா அல்லது ஏஐ உருவாக்கியதா எனத் தெரியவில்லை. ஆனால், இரண்டு நாள்களாக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இந்த ரீல்ஸைதான் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் பிறந்தநாளில் அவர் தனது நாய்க்குட்டியைக் கொஞ்சுவது போன்ற புகைப்படத்தை த்ரிஷா பதிவிட்டு இருந்தார். இது வைரலானது.
நடிகர் விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சில விஷமிகள் த்ரிஷாவையும் இணைத்து பேசுவார்கள். அவர்கள் காதலிப்பதாகவும் பல ஆண்டுகளாக வதந்திகள் சுற்றுகின்றன.
அதனால், த்ரிஷா என்னப் பகிர்ந்தாலும் சர்ச்சையாகும். இருப்பினும், நடிகை த்ரிஷா அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனக்கு தோன்றுவதை பதிவிட்டு வருகிறார்.
summary
Actress Trisha's Stress related Insta Reels are going viral on social media. It is also noteworthy that those reels are already trending.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.