அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு எப்போது?
அல்லு அர்ஜுன் - அட்லி படம் குறித்து...
இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அட்லி கூறினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!
ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லி, நடிகர் சல்மான் கானை வைத்து புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.