முகப்பு
செய்திகள்

60 வயதில் புதிய காதலியை அறிமுகப்படுத்திய ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Updated On : 14 மார்ச் 2025, 2:01 pm IST
ஆமீர்கான், அவரது காதலி கௌரி ஸ்ப்ராட்
பகிர்:

நடிகர் ஆமிர் கான் தனது புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், இருவரும் ஒராண்டாக ஒன்றாக வாழ்வதாகக் கூறியுள்ளார்.

குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டுமென நடிகர் ஆமிர்கான் சமீக காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி வந்தார்.

ஆமிர் கான் முதல்முறையாக 1986-2002 வரை தயாரிப்பாளர் ரீனா டட்டுடன் திருமணம் செய்து வாழ்ந்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

பிறகு, 2005இல் கிரன் ராவை ஆமிர்கான் திருமணம் செய்தார். ஆனால், இவர்களும் 2021இல் பிரிந்தனர். ஆனாலும் இருவரும் அவர்களது குழந்தை ஆசாத்துக்காக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்ட விழாவில் அவரது காதலியை அறிமுகம் செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது:

எனது காதலியை இந்த நேரத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். மேலும், நான் இனிமேல் மறைக்கவும் தேவையில்லை. நேற்றிரவு ஷாருக்கானையும் சல்மான் கானையும் சந்தித்தார்.

கௌரி ஸ்ப்ராட் பெங்களூரைச் சேர்ந்தவர். 25 ஆண்டுகளாக எனக்கு அவரைத் தெரியும். ஆனால், கடந்த ஓன்றரை ஆண்டாகத்தான் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

மும்பையில் எதேர்ச்சையாக சந்தித்தோம். பின்னர் தொடர்பில் இருந்தோம். மற்றதெல்லாம் இயற்கையாக நடந்தது.

நான் ரீனாவுடனும் கிரனுடனும் 16 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். பல வழிகளில் நாங்கள் இன்னமும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.

60 வயதில் திருமணம் செய்வது எனக்கு பொருந்துமா தெரியவில்லை. எனது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முன்னாள் மனைவிகளுடன் நல்ல பந்தத்தில் இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments