FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மணிமேகலைக்கு சிறப்பு பரிசளித்த சிநேகா, வரலட்சுமி சரத்குமார்!

தொகுப்பாளர் மணிமேகலைக்கு பிறந்தநாளையொட்டி நடிகை சிநேகா, வரலட்சுமி சரத்குமார் சிறப்பு பரிசுகளை அளித்து வாழ்த்து..

Updated On : 7 மே 2025, 4:44 pm IST
மணிமேகலை - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலைக்கு பிறந்தநாளையொட்டி நடிகை சிநேகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மற்ற எந்த ஆண்டுகளிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சின்ன திரை தொகுப்பாளர் மணிமேகலை இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நகைச்சுவை கலந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்ட மணிமேகலை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

Advertisement

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு, வாழ்க்கையே தொலைந்துவிட்டது என பலர் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், ஜீ தமிழ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் மணிமேகலை.

மணிமேகலை - இன்ஸ்டாகிராம்

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் மணிமேகலைக்கு நடிகை சிநேகா, பட்டுப் புடவையை பரிசளித்துள்ளார். இதேபோன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்ணாடியை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பரிசுகளுடன் மணிமேகலை - இன்ஸ்டாகிராம்

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலை, எனக்காக நேரம் ஒதுக்கி இப்பொருள்களை வாங்கி என் பிறந்தநாளை சிறப்புடையதாக்கியதற்கு மிக்க நன்றி எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவுக்கும் மணிமேகலை நன்றியை பதிவு செய்துள்ளார்.

மணிமேகலைக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments