குறுகிய காலத்தில் நிறைவடைந்த புன்னகைப் பூவே தொடர்!
புன்னகைப் பூவே தொடர் நிறைவு தொடர்பாக...
புன்னகைப் பூவே தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ஆகியோர் நடித்து வந்தனர்
புன்னகைப் பூவே தொடரின் டிஆர்பி புள்ளிகள் குறைந்து வருவதால், இத்தொடரை முடித்து புதிய தொடரை ஒளிபரப்ப முடிவெடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கப்பட்ட புன்னகைப் பூவே தொடர் 9 மாதங்களே ஆன நிலையில் 319 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.
தொடர்கள் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலே முடிக்கப்படுகிறது. டிஆர்பி மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் முடிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 500 நாள்களைக் கடந்து தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாவது அரிதாகவுள்ளது.
குறுகிய காலத்தில் புன்னகைப் பூவே தொடர் நிறைவடைந்த நிலையில், இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரத்தில் கிருஷ்ணா - ஆர்த்திகாவு நடிக்கும் புதிய தொடரான வினோதினி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவைப் பாராட்டிய கமல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.