இசையமைப்பாளர் இளையராஜா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் கடந்தாண்டு இலங்கையில் காலமானார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஏஐ மூலம் கோட் திரைப்படத்தில் பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இளையராஜா தன் மகள் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (bavatha girls orchestra) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத் திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரித்துள்ளார்.
விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிசி! லோகேஷ் கனகராஜ் படத்தின் புரோமோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.