முகப்பு
செய்திகள்

இது எதிர்காலத்திற்கு ஆபத்து: நிவேதா பெத்துராஜ்

ஏஐ குறித்து நிவேதா பெத்துராஜ்...

Updated On : 2 நவம்பர், 2025 at 10:45 AM
நிவேதா பெத்துராஜ்
பகிர்:

நடிகை நிவேதா பெத்துராஜ் ஏஐ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.

பின், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

நிவேதா பெத்துராஜ் தன் நீண்ட நாள் நண்பரான ரஜ்ஹித் இப்ரான் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நிவேதா எக்ஸ் தளத்தில், “அபத்தமான ஏஐ விடியோக்கள் உண்மைபோல் காட்சியளிப்பது மோசமானது. இந்த போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஆபத்தாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →