அதெல்லாம் ஒரு ஜாலிதான்... மமிதா பைஜூ!
பாடல் பாடியது குறித்து மமிதா பைஜூ...
நடிகை மமிதா பைஜூ தான் பாடிய பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஜன நாயகன் இசை வெளியீட்டின்போது, மேடையில் நடனமாடியதுடன், அழகிய தமிழ் மகனில் இடம்பெற்ற ‘எல்லா புகழும்...’ பாடலின் சில வரிகளையும் பாடினார்.
ஆனால், மமிதாவின் குரல் பாடலுக்கான தரத்தில் இல்லாததால் அவரை ரசிகர்கள் கிண்டலடித்து, விடியோக்களாக வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், மமிதாவிடம் இப்பாடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” எனக் கூறியுள்ளார்.
mamitha baiju answered on her singing
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.