ஆஸ்கர் போட்டியில் பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்!
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்த தலித் சுப்பையா எனும் ஆவணப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகியுள்ளது குறித்து...
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ எனும் ஆவணப்படம் ஆஸ்கர் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர், நீலம் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமைப்புகளை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசை ரீதியான ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கிரிதரன் இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, “தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த ஆவணப்படம், 2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகி அங்கு திரையிடப்படவுள்ளதாக, நீலம் தயாரிப்பு நிறுவனம் இன்று (நவ. 15) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படம் விழாவில், 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரெபல்ஸ்’ சிறந்த முழு நீள ஆவணப்படம் எனும் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் காந்தா பட முதல்நாள் வசூல்!
'Dalit Subbaiah - Voice of the Rebels' has been selected for the Oscars.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.