நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!
நிர்வாணக் காட்சியில் நடித்தது குறித்து ஆண்ட்ரியா...
நடிகை ஆண்ட்ரியா பிசாசு - 2 திரைப்படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தயாரித்து, நடித்த மாஸ்க் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதுவரை ரூ. 5 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ஆண்ட்ரியா பாடவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா, “பிசாசு -2 கதையில் நான் நிர்வாணமாக நடிக்க வேண்டிய காட்சிகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், படமாக்கியபோது மிஷ்கின் அதனை நீக்கிவிட்டார். சில கவர்ச்சியான காட்சிகள் இருந்தாலும் அவை நிர்வாணக்காட்சிகள் அல்ல. இந்த மாதிரியான காட்சியை வித்தியாசமான முறையில் எடுக்க வேண்டுமென மிஷ்கின் போன்ற இயக்குநர் கேட்டால், அவரின் நோக்கத்தை நான் நம்புவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!
andrea talks about nude scenes in pisaasu 2 movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.