பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. 
செய்திகள்

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள இருவர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய்சேதுபதியே, இம்முறையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிஸ் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை போட்டியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, யோகா ஆசிரியரான நந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பவர்களுடன் சண்டையிட்டு, மனச்சோர்வுடன் காணப்பட்ட நிலையில், பிக் பாஸிடம் தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறினார்.

வார இறுதி வெளியேற்றத்திற்கான நிகழ்ச்சி நேற்று(அக். 11) நடைபெற்ற நிலையில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்த வாரம் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும். இருவர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

Two people have been eliminated from the Bigg Boss show this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT